ஜெயம் ரவி, அர்விந்த்சாமி, இருவரும் நாயகராகவும், ஹன்சிகா மோத்வானி நாயகியாகவும் நடிக்க, பிரபுதேவாவும்,
ஐசரி கே.கணேஷும் இணைந்து, பிரபுதேவா ஸ்டுடியோஸ் வழங்க, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் வெளியிட, “ரோமியோ ஜூலியட்” பட இயக்குனர் லஷ்மன் இயக்கத்தில், போலீஸுக்கும், போக சித்தரின் கூடு விட்டு கூடு பாயும் சித்து விளையாட்டு படித்த ஜெகஜாலக் கில்லாடிக்குமிடையில் நடக்கும் நீயா? நானா..? போராட்டம் தான் “போகன்” படம்.
கூடு விட்டு கூடு பாயும் கலையை போக சித்தரின் ஓலைச் சுவடியை களவாடி கள்வரான அரவிந்த்சாமி தன்னிடம் உள்ள பழனி மலை போக சித்தரின் கூடு விட்டு கூடு பாயும் திறனால் சென்னையில் உள்ள ஒரு பெரும் நகைக்கடையிலும், ஒரு பெரிய வங்கியின் கிளையிலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாது பல கோடிகளை கொள்ளையடிக்கிறார். அதனால் வசமாக போலீஸில் சிக்கிக் கொண்டு லாக்-அப் செல்கிறார். வங்கி அதிகாரி “ஆடுகளம்” நரேன், அவரை காப்பாற்றி நிஜக் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமையும், கட்டாயாமும் அவரது பிள்ளையும் பெரும் போலீஸ் அதிகாரியுமாகிய ஜெயம் ரவிக்கு இருக்கிறது. அரவிந்தசாமியின் கூடு விட்டு கூடு பாயும் சித்து விளையாட்டுகளைத் தாண்டி, அர்விந்தசாமி சம்பந்தப்பட்ட அந்த கொள்ளை கேஸ்களில் உண்மை கண்டறிந்து, ஜெயம் ரவி அவரை சட்டத்தின் முன் நிறுத்தி சிறையிலடைத்தாரா.? அல்லது அர்விந்த்சாமி போலீஸ் ஜெயம் ரவியின் மனைவியாகப் போற ஹன்சிகாவையும், ரவியின் குடும்பத்தையும் அழித்து, தனக்கு எதிரான ஆதாரங்களையும் அழித்து ஜெயிக்கிறரா? என்பது தான் “போகன்” படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான கதையும், காட்சிப்படுத்தலும்!
ஜெயம் ரவி, போலீஸ் உதவி கமிஷ்னர் விக்ரமாக செம ஷார்ப். ஜெயம் ரவி அர்விந்த்சாமி உருவிலும், தன் உருவிலும் மாறி, மாறி பண்ணும் கலாட்டாக்கள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. ஹன்சிகாவுடனான காதல் காட்சிகளில் படு ரொமான்ஸ் காட்டியிருப்பதும், ஆக்ஷன் காட்சிகளில் செம ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. “பழிவாங்க வந்த இடத்துல இப்படி ஒரு இலவச இணைப்பா?” என கேட்டு ஹன்சிகாவின் பிளையிங் கிஸ்ஸுக்கு செம மூடாய் ஜெயம் ரவியின் உடம்பில் இருக்கும் அர்விந்தசாமி ஆச்சர்யமாய் பார்ப்பது… போன்ற காட்சியில் செமயாய் மிரட்டியிருக்கிறார் ரவி.
கதாநாயகி ஹன்சிகா மோத்வானி – குடித்துவிட்டு போதையில் உளறுவதை ரசித்தபடி தனது செல்லில் ஹன்சிகாவின் நம்பரை அவரது பாத்திரப்பெயரான மகா எனும் பெயரில் இருந்து வொய்ப் என மாற்றி வைத்துக் கொள்வதிலும், போதையில் பிரியாணி சாப்பிடும் ஹன்சிகாவிடம் “நீங்கள் ராஜ்கிரன் பேனா..” எனக் கேட்கும் காட்சியிலும் கூட ஜெயம் ரவி மிதமிஞ்சிய நடிப்பை அசத்தலாக வழங்கியிருக்கிறார். வாவ்!
கிட்டத்தட்ட வில்லானிக் ஹீரோவாக பல நூறாண்டுகளுக்கு முன் பழனியில் வாழ்ந்த சித்தர் போகரின் ஓலைச்சுவடிகளைக் களவான்டு, அதன் வழிகாட்டுதல்படி, அதிகம் ரிஸ்க் இல்லாது ரஸ்க் சாப்பிடும் மன்னர் பரம்பரையின் கடைசி வாரிசு ஆதித்யாவாக அர்விந்தசாமி, “ஏன் எனக்கும் கால் டாக்ஸி சொல்லப் போறீயா…” என்று நக்கலடித்தப்படியும் “நான்லாம் போதையிலதான்டா ரொம்ப தெளிவா இருப்பேன்…” என்ற படியும் முன்பு ஹீரோவாக காட்டிய ரொமான்ஸைக் காட்டிலும், தற்போது வில்லன் கம் ஹீரோவாக செம பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார். சாமி.. வாவ், “கீப் இட் அப்…”
கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி, செம பக்கா. பாதாம் பிஸ்தா அதிகம் போட்டு அரைத்து செய்த குல்பி ஐஸ் மாதிரி, கொழுக் மொழுக் என்று ரசிகனின் நெஞ்சை, இப்படி முழு ஆக்ஷன் படத்தில் ரொமான்ஸ் லுக்கில் அடிக்கடி குளிர்விக்க பயன்பட்டிருக்கிறார். அதேநேரம், கதைக்காகவும், அதன் போக்குக்காகவும், அர்விந்த்சாமி உருவில் இருக்கும் ஜெயம் ரவியை எல்லோரும் ஜெயம் ரவி தான் என நம்பும் போது ஹன்சிகா மட்டும் நம்பாது இருப்பது நம்பும்படியாக இல்லை.
ஆர்காலஜிக்கல் துறை பேராசிரியராக நாசர், பொறுப்பான போலீஸ் கமிஷ்னராக பொன்வண்ணன், பேங்க் மேனேஜர் கம் ஜெயம் ரவியின் அப்பாவாக “ஆடுகளம்” நரேன் மற்றும் ரவியின் போலீஸ் தோழராக சத்யா – ஜாமி, பிரசாத் – நாகேந்திர பிரசாத், பெண் போலீஸ் அக்ஷரா உள்ளிட்ட அனைவரும், அசத்தலாக நடித்துள்ளனர்.
இசைஞர் டி.இமானின் இசையில்., “டமாலு டமாலு டுமீலு டுமீலு…”, “செந்தூரா செந்தூரா சேர்ந்தே செய்வோம்…”, “வாராய்… வாராய் நீ வாராய்….”, “போகன் வில்லா….” உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் சில இடங்களில் சப்தமாய் திணிக்கப்பட்டிருப்பதாய் தோன்றினாலும், படத்திற்கு மேலும் பலம் சேர்த்து., போகனை, ராயல் லுக்கிற்கு ரத்தினக்கம்பளம் விரித்து அழைத்து செல்கின்றன.
ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் போகன் எனும் திரைப்படத்தை, திரைக்காவியமாக்கும் ஒவியப்பதிவு. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரியும் பக்காவாக ,பதமாக வேலை செய்திருப்பது ஆறுதல்!
லஷ்மனின் எழுத்து, இயக்கத்தில் அர்விந்த்சாமி, ஜெயம் ரவி ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகிக் கொள்ளும் “பப் – பார்” காட்சியில், “ஏன் எனக்கும் கால் டாக்ஸி சொல்லப் போறீயா….” என அர்விந்த்சாமி நக்கல் அடிப்பதும், “நீங்க இப்பதான் சிவபானத்துல இருக்கீங்க….” நாங்கள்ளாம் சொர்க்கத்துக்கு போற போதை வஸ்களையே டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறோம் என அர்விந்தசாமிக்கு புது போதையை அறிமுகம் செய்யும் காட்சியில் ஜெயம் ரவியும் சக்கைப்போடு போட்டு பக்காவாய் நடித்திருப்பதில் அவர்களையும் தாண்டி இயக்குனர் தெரிகின்றார் என்பது டைரக்டரின் வெற்றி!
ஐசரி கே.கணேஷும் இணைந்து, பிரபுதேவா ஸ்டுடியோஸ் வழங்க, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் வெளியிட, “ரோமியோ ஜூலியட்” பட இயக்குனர் லஷ்மன் இயக்கத்தில், போலீஸுக்கும், போக சித்தரின் கூடு விட்டு கூடு பாயும் சித்து விளையாட்டு படித்த ஜெகஜாலக் கில்லாடிக்குமிடையில் நடக்கும் நீயா? நானா..? போராட்டம் தான் “போகன்” படம்.
கூடு விட்டு கூடு பாயும் கலையை போக சித்தரின் ஓலைச் சுவடியை களவாடி கள்வரான அரவிந்த்சாமி தன்னிடம் உள்ள பழனி மலை போக சித்தரின் கூடு விட்டு கூடு பாயும் திறனால் சென்னையில் உள்ள ஒரு பெரும் நகைக்கடையிலும், ஒரு பெரிய வங்கியின் கிளையிலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாது பல கோடிகளை கொள்ளையடிக்கிறார். அதனால் வசமாக போலீஸில் சிக்கிக் கொண்டு லாக்-அப் செல்கிறார். வங்கி அதிகாரி “ஆடுகளம்” நரேன், அவரை காப்பாற்றி நிஜக் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமையும், கட்டாயாமும் அவரது பிள்ளையும் பெரும் போலீஸ் அதிகாரியுமாகிய ஜெயம் ரவிக்கு இருக்கிறது. அரவிந்தசாமியின் கூடு விட்டு கூடு பாயும் சித்து விளையாட்டுகளைத் தாண்டி, அர்விந்தசாமி சம்பந்தப்பட்ட அந்த கொள்ளை கேஸ்களில் உண்மை கண்டறிந்து, ஜெயம் ரவி அவரை சட்டத்தின் முன் நிறுத்தி சிறையிலடைத்தாரா.? அல்லது அர்விந்த்சாமி போலீஸ் ஜெயம் ரவியின் மனைவியாகப் போற ஹன்சிகாவையும், ரவியின் குடும்பத்தையும் அழித்து, தனக்கு எதிரான ஆதாரங்களையும் அழித்து ஜெயிக்கிறரா? என்பது தான் “போகன்” படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான கதையும், காட்சிப்படுத்தலும்!
ஜெயம் ரவி, போலீஸ் உதவி கமிஷ்னர் விக்ரமாக செம ஷார்ப். ஜெயம் ரவி அர்விந்த்சாமி உருவிலும், தன் உருவிலும் மாறி, மாறி பண்ணும் கலாட்டாக்கள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. ஹன்சிகாவுடனான காதல் காட்சிகளில் படு ரொமான்ஸ் காட்டியிருப்பதும், ஆக்ஷன் காட்சிகளில் செம ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. “பழிவாங்க வந்த இடத்துல இப்படி ஒரு இலவச இணைப்பா?” என கேட்டு ஹன்சிகாவின் பிளையிங் கிஸ்ஸுக்கு செம மூடாய் ஜெயம் ரவியின் உடம்பில் இருக்கும் அர்விந்தசாமி ஆச்சர்யமாய் பார்ப்பது… போன்ற காட்சியில் செமயாய் மிரட்டியிருக்கிறார் ரவி.
கதாநாயகி ஹன்சிகா மோத்வானி – குடித்துவிட்டு போதையில் உளறுவதை ரசித்தபடி தனது செல்லில் ஹன்சிகாவின் நம்பரை அவரது பாத்திரப்பெயரான மகா எனும் பெயரில் இருந்து வொய்ப் என மாற்றி வைத்துக் கொள்வதிலும், போதையில் பிரியாணி சாப்பிடும் ஹன்சிகாவிடம் “நீங்கள் ராஜ்கிரன் பேனா..” எனக் கேட்கும் காட்சியிலும் கூட ஜெயம் ரவி மிதமிஞ்சிய நடிப்பை அசத்தலாக வழங்கியிருக்கிறார். வாவ்!
கிட்டத்தட்ட வில்லானிக் ஹீரோவாக பல நூறாண்டுகளுக்கு முன் பழனியில் வாழ்ந்த சித்தர் போகரின் ஓலைச்சுவடிகளைக் களவான்டு, அதன் வழிகாட்டுதல்படி, அதிகம் ரிஸ்க் இல்லாது ரஸ்க் சாப்பிடும் மன்னர் பரம்பரையின் கடைசி வாரிசு ஆதித்யாவாக அர்விந்தசாமி, “ஏன் எனக்கும் கால் டாக்ஸி சொல்லப் போறீயா…” என்று நக்கலடித்தப்படியும் “நான்லாம் போதையிலதான்டா ரொம்ப தெளிவா இருப்பேன்…” என்ற படியும் முன்பு ஹீரோவாக காட்டிய ரொமான்ஸைக் காட்டிலும், தற்போது வில்லன் கம் ஹீரோவாக செம பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார். சாமி.. வாவ், “கீப் இட் அப்…”
கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி, செம பக்கா. பாதாம் பிஸ்தா அதிகம் போட்டு அரைத்து செய்த குல்பி ஐஸ் மாதிரி, கொழுக் மொழுக் என்று ரசிகனின் நெஞ்சை, இப்படி முழு ஆக்ஷன் படத்தில் ரொமான்ஸ் லுக்கில் அடிக்கடி குளிர்விக்க பயன்பட்டிருக்கிறார். அதேநேரம், கதைக்காகவும், அதன் போக்குக்காகவும், அர்விந்த்சாமி உருவில் இருக்கும் ஜெயம் ரவியை எல்லோரும் ஜெயம் ரவி தான் என நம்பும் போது ஹன்சிகா மட்டும் நம்பாது இருப்பது நம்பும்படியாக இல்லை.
ஆர்காலஜிக்கல் துறை பேராசிரியராக நாசர், பொறுப்பான போலீஸ் கமிஷ்னராக பொன்வண்ணன், பேங்க் மேனேஜர் கம் ஜெயம் ரவியின் அப்பாவாக “ஆடுகளம்” நரேன் மற்றும் ரவியின் போலீஸ் தோழராக சத்யா – ஜாமி, பிரசாத் – நாகேந்திர பிரசாத், பெண் போலீஸ் அக்ஷரா உள்ளிட்ட அனைவரும், அசத்தலாக நடித்துள்ளனர்.
இசைஞர் டி.இமானின் இசையில்., “டமாலு டமாலு டுமீலு டுமீலு…”, “செந்தூரா செந்தூரா சேர்ந்தே செய்வோம்…”, “வாராய்… வாராய் நீ வாராய்….”, “போகன் வில்லா….” உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் சில இடங்களில் சப்தமாய் திணிக்கப்பட்டிருப்பதாய் தோன்றினாலும், படத்திற்கு மேலும் பலம் சேர்த்து., போகனை, ராயல் லுக்கிற்கு ரத்தினக்கம்பளம் விரித்து அழைத்து செல்கின்றன.
ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் போகன் எனும் திரைப்படத்தை, திரைக்காவியமாக்கும் ஒவியப்பதிவு. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரியும் பக்காவாக ,பதமாக வேலை செய்திருப்பது ஆறுதல்!
லஷ்மனின் எழுத்து, இயக்கத்தில் அர்விந்த்சாமி, ஜெயம் ரவி ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகிக் கொள்ளும் “பப் – பார்” காட்சியில், “ஏன் எனக்கும் கால் டாக்ஸி சொல்லப் போறீயா….” என அர்விந்த்சாமி நக்கல் அடிப்பதும், “நீங்க இப்பதான் சிவபானத்துல இருக்கீங்க….” நாங்கள்ளாம் சொர்க்கத்துக்கு போற போதை வஸ்களையே டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறோம் என அர்விந்தசாமிக்கு புது போதையை அறிமுகம் செய்யும் காட்சியில் ஜெயம் ரவியும் சக்கைப்போடு போட்டு பக்காவாய் நடித்திருப்பதில் அவர்களையும் தாண்டி இயக்குனர் தெரிகின்றார் என்பது டைரக்டரின் வெற்றி!
0 comments:
Post a Comment